Total Pageviews

Thursday, July 28, 2011

காதல் எனப்படுவது யாதெனில்?

கிராமியக் காதல் எனப்படுவது யாதெனில்

களத்துமேடு கம்மாக்கரைன்னு
களம் கண்ட இடத்திலெல்லாம்
காதல் சாகுபடி செய்வது

நகரக்காதல் எனப்படுவது யாதெனில்

பிஸ்ஸா கார்னர்
தியேட்டரில் கார்னர்
எனக் கையாலும் காதல்
செய்வது

தெய்வீகக் காதல் எனப்படுவது யாதெனில்

ப்ரதோஷம் ப்ரம்மதரிசனம்னு
பக்திப்பழமா கதைவிட்டு
சூடக்காற்றில் காதல்
ஜோதி ஏற்றுவது

கடலோரக் காதல் எனப்படுவது யாதெனில்

அடிக்கிற வெயில் கந்தகமா எரிஞ்சாலும்
கோமியமா மழை கொட்டுனாலும்
எவன் பார்த்தா எனக்கென்ன எனக் கவலையின்றி
துப்பட்டாவுக்கடியில் காதலில் எரிவது

இலக்கியக் காதல் எனப்படுவது யாதெனில்

தெரிஞ்சது டார்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள்னாலும்
லியோ டால்டாய்ஸ் எனக்கு மச்சான்ங்கற
ரேஞ்சுக்கு அகநானூறும் அல்வா ஐநூறும் விட்டு
காதல் வளர்ப்பது !

காதல் கவிதை எனப்படுவது யாதெனில்

தான் காதலித்தவளை(ரை ) நினைத்து
கணவன்கள் (மனைவியர்)
எழுதுவது !

காதலில் நண்பன் எனப்படுபவர் யாவரெனில்

காதலி மாட்டினால் அவன் கொடுக்கும்
பார்டியில் 4 லார்ஜ் அடிப்பவன்
காதலி அப்பீட் ஆனால்
அவன் கொடுக்கும் பார்ட்டியில்
4 லார்ஜ் அடிப்பவன்

அமரக்காதல் எனப்படுவது யாதெனில்

இருவரும் திருணம் செய்துகொள்வது
வெவ்வேறு ஆட்களை!

காதலில் தோல்வி எனப்படுவது யாதெனில்

காதலித்தவளை(ரை)யே
திருமணம் செய்து கொள்வது


காதல் தோல்வி எனப்படுது யாதெனில்

தாடி வளர்த்துக்கொள்வது
அடுத்த அழகான பெண்ணைப்
பார்க்கும் வரை !

காதலில் Living together எனப்படுவது யாதெனில்
Make Love
Not Babies
என்ற தத்துவ ரகத்தைச் சார்ந்தது !



ஏதோ என்னால முடிஞ்சவரை சொல்லியிருக்கேன். வழக்கம் போல ஜாலியா எடுத்துக்குங்கப்பு ! தேவையில்லாம செருப்பு, முட்டை, தக்காளிகளை வீசி உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணிடாதீங்கோவ் ! கொஞ்சம் உங்களுக்கும் தெரிஞ்சதை அள்ளித் தெளிச்சீங்கன்னா நானும் சந்தோஷபடுவேன்!

No comments:

Post a Comment