Total Pageviews

Thursday, July 28, 2011

ஜில்லுன்னு 5 doubts கண்ணுங்களா ! ! !

என் சந்தேகங்களை அப்படியே அள்ளித்தெளிக்கிறேன் முடிஞ்சா தீர்த்து வைங்க தீர்தயாத்திரை பெரியோர்களே தாலாட்டும் தாய்மார்களே ( மரியாதை மரியாதை ) !!


1) சேலை கட்டுனா இடுப்பு தெரியுது வயிரு தெரியுதுன்னு சுடிதாருக்கு மாறுனீங்களே கண்னுங்களா இப்போ அந்த சுடியிலேயும் Short சுடின்னு இடுப்புக்கு ஒரு ஜாண் மேல இருந்து கிழிச்சு விட்டுகிட்டு என்னைய மாதிரி அப்புறாணியோட கண்ணை கன்னா பின்னான்னு அலைபாய விடுறீயளே ஏங்க ஜீன்ஸ் போட்ட மகாலட்சுமிகளே இது நியாயமா ?

2) மொதோ வருசத்துல இருந்து பின்னாடியே நாயா சுத்திகிட்டு உங்களுக்காக வாலிப சந்தோசங்களான தம்மு தண்ணியெல்லாம் தியாகம் பண்ணிட்டு கலியுக முனிவர்களா சடாமுடியோட தெய்வீக காதலோட உங்களையே அம்பாளா நெனச்சு சுத்திகிட்டு இருக்கற அப்பாவி அய்யாசாமிகளை விட்டுட்டு பல்சரில் படம் போட்டுகிட்டு சாயங்காலம் ஆனா ‘கட்டிங்’ தெனம் அஞ்சு பாக்கெட் சிகரெட்டை அல்டாப்பா சாம்பலாக்குற அல்வா வாயன்களோட அலப்பறையா பில்லியனில் குந்திகினு போறீயளே இது ஞாயமா ? அதெப்படீங்க நீங்க மட்டும் ரொம்ப கரெட்டா ‘தப்பான’ ஆளை தேர்தெடுக்கறீங்க ?

3) உங்களுக்கு வாங்கி குடுக்குற ஒரு ‘பட்டர் பாப்கார்ன்’ ரேட்டுக்கு எங்க மெஸ்ஸிலே ஒரு அன்லிமிட்டட் மீல்ஸ்சயே ரவுண்டு கட்டு அடிக்கலாம்னு உங்களுக்கு தெரியுமா ? எங்களுக்கெல்லாம் ராவா ‘கோக்’ கை முக்கி முக்கி குடிச்சாலும் ரெண்டு நிமிஷத்துக்கு மேல குடிக்க முடியலையே ?? அதிலே எப்பவாச்சும் ஒரு 60 மிலி கலந்தா வேணா ஒரு 10 நிமிஷத்துக்கு ஒப்பேத்தலாம் !! ஆனா ஒரு 300 மிலி கோக்கை வாங்கி வச்சுகிட்டு எப்படீங்க 3 மணி நேரத்துக்கு குடிச்சுகிட்டு இருக்கீங்க? சொட்டு நீர் பாசனம் போல ‘சொட்டுகோக்’ பாசனம்னு புதுசா ஏதாசும் கத்துகிட்டு வந்துருக்கீயளா?

4) எங்களூக்கெல்லாம் கொட்டாவி விடவே வாயை திறக்க முடியலே. ஆனா எப்பவும் ப்ரெஷ்ஷா FM ரேடியோ மாதிரி 24 மணி நேரமும் பேசிகிட்டே இருக்கீங்களே உங்களுக்கெல்லாம் வாயே வலிக்காதா ? அடுத்தவன் பேசனும் நாம கேட்கணும்னு எப்போவாசும் நெனச்சு பார்த்து இருக்கீங்களா??

5) பொறக்கும்போதே கவச குண்டலடத்தோட பொறந்த மாதிரி எந்த நேரமும் செல்போனும் காதுமா கலக்குறீங்களே நெசமாலுமே பேசறீங்களா இல்லை பேசற மாதிரி படம் காட்டறீங்களா? அதெப்படீங்க கரெட்டா நாங்க pass பண்ரப்போ மட்டும் கஸ்மாலம் பேத்துருவேண்ணு பேத்தனமா செல்போன்ல திட்ட ஆரம்பிக்கிறீங்க ?

இப்போதைக்கு இவ்ளோ போதுங்க ! எல்லாமே என்னோட மற்றும் நம்ம குடிமகன்களோடcஞாயமான சந்தேகம் தானுங்க. படிச்சுபுட்டு அப்புறம் தாய் குலங்களெல்லாம் என் முதுகுலே தீபாவளி கொண்டாடிறாதீங்க . முடிஞ்சா பதில் சொல்லுங்க. இல்லாகாட்டி ஓரமா ஒக்காந்து உங்க சிந்தனைக் குதிரையோட வாலை திருகிவிட்டு பாருங்க. ஏதாச்சும் பதிலு கெடைக்காமலா போய்டும்?

No comments:

Post a Comment