Total Pageviews

Thursday, July 28, 2011

எஸ்க்கியூஸ் மீ... எனக்கு ஒரு டவுட்...

வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கிற இந்த சமயம் ஆன்லைன் வழியாக தினமும் 2 தமிழ் சினிமா பார்க்கிறேன். (1970-யில வந்த படம் தொடங்கி டப்பிங் படங்களும் அதில் அடக்கம்). அதன் விளைவே இந்த கேள்விகள்.

டவுட் நெ 1:
நாலஞ்சு பொண்ணுங்க மொத்தமா நடந்து வரும் போது, பளீர்-ன்னு காட்டற ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோ லவ் பண்ண ஆரம்பிக்கிறாரே? அப்புறம் ஹீரோ போற காபி ஷாப், பஸ் ஸ்டாண்ட்-ன்னு எல்லா இடத்திலேயேயும் அந்த பொண்ணும் இருக்கே அது எப்படி?
அதே மாதிரி நிஜத்தில் யாருக்கேனும் லவ் வந்திருக்கா?

டவுட் நெ 2:
மலை உச்சியில் இருந்து தண்ணிக்குள்ள குதிக்கும் போதோ (நீச்சல் தெரியாட்டியும்), அடுக்கு மாடியில் இருந்து ஓடற லாரி மேல குதிக்கிறப்பவும் ஹீரோவுக்கு ஒன்னுமே ஆகறதில்லை.
ஆனா மாடியில் இருந்து படிக்கட்டில் உருண்டு விழற அம்மா கேரக்டரும், மனைவி கேரக்டரும் ஸ்பாட்டிலேயே செத்து போறாங்களே அது எப்படி?

டவுட் நெ 3:
ஹீரோ-வோட காதலியையோ, குடும்பத்தையோ கடத்தி வெச்சுக்கிட்டு வில்லன் மட்டும் மிரட்டறாரே?
வில்லனோட குடும்பத்தை கடத்தி வெச்சிக்கிட்டு ஏன் ஹீரோ மிரட்ட கூடாது?

டவுட் நெ 4:
ஹீரோவோ, வில்லனோ நினைச்சவுடனே பிளைட் புடிச்சு அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ கிளம்பி போறாங்களே?
அவங்களுக்கு மட்டும் எப்படி உடனே டிக்கெட் கிடைக்குது? விசா இல்லாம எப்படி போறாங்க? அதுவும் இல்லாம விசிட்டர் விசாவா இருந்தால் கூட அப்பிளை பண்ணி ரெண்டு வாரமாவது ஆகணுமே?
(நமக்கு ஏற்காடு எக்ஸிப்ரஸில் ஊருக்கு போக டிக்கெட் எடுக்கவே ஒரு மாசத்துக்கு முன்னாடி புக் பண்ண வேண்டியிருக்கு?)

டவுட் நெ 5:
ஹீரோயினை கடத்திக்கிட்டு வர்ற வில்லன், இப்பவே நமக்கு கல்யாணம்-ன்னு சொல்லி தயாராக சொல்லறார். ஹீரோயினும் புடவை கட்டிக்கிட்டு வராங்க? எப்படி அவங்களுக்கு புடவையெல்லாம் எடுத்து பிளவுஸ் தைச்சு ஏற்கனவே வைச்சிருப்பாங்களா?
சரி வில்லனை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லாத ஹீரோயின் ஏன் நகையெல்லாம் போட்டு தலை நிறைய பூ வைச்சு, புல் மேக்கப்போட வராங்க?

டவுட் நெ 6:
ஹீரோ ஓங்கி ஒரு அடி அடிக்கும் போதே வில்லனோட அடியாள் கீழே விழுந்தடறார்.
ஆனா வில்லன் துப்பாக்கியால சுட்டு மயங்கி விழுந்த பிறகும், எந்திரிச்சு ஹீரோ சண்டை போடறாரே அது எப்படி?

டவுட் நெ 7:
அதெப்படி ஊருக்குள்ள ஆயிரம் பேர் இருந்தும் வில்லன் பண்ற அநியாயங்களை ஹீரோ மட்டும் கண்டுபிடிக்கிறார்?
(அவருக்கு கவர்மெண்ட்-ல ஒரு வேலை போட்டு குடுத்தா, நடக்கிற எல்லா ஊழல்களையும் கண்டுபிடிச்சிடுவாரே.. யாராவது எம்பிளாய்மெண்ட் ஆபீசில் சொல்லுங்களேன்.)

டவுட் நெ 8:
கோமா ஸ்டேஜில் இருக்கற ஹீரோ, அத்தனை தடவை டாக்டர் முயற்சி செஞ்சும் கண்விழிக்காம, எப்படி ஹீரோயின் விடற கண்ணீர், மேல படும் போது மட்டும் எந்திரிக்கிறார்?
நடக்கவே முடியாம படுத்திருந்தவரால எப்படி, உடனே ஆக்ரோஷமா கத்தி வில்லனை அடிக்க முடியுது?

டவுட் நெ 9:
வில்லனோட அடியாட்கள், மொத்தமா பத்து பேர், பன்னிரெண்டு பேர் ரோட்டில அரிவாளோட சுத்தறாங்களே? அது மாதிரி நிஜ வாழ்க்கையில் யாராவது தெருவில் அரிவாளோட போறாங்களா?

டவுட் நெ 10:
எல்லா ஹீரோவும் ரயிலேறி சென்னைக்கு வராங்களே அது எந்த நம்பிக்கையில? அப்படி வந்தபிறகும் ஒரு வேலையும் இல்லாம, செல்போன், பைக்-ன்னு எப்படி அவங்களால சுத்த முடியுது? அட்லீஸ் ஹீரோயினுக்கு வாங்கித் தர ஐஸ்கீரிம் காசுக்கு என்ன பண்ணுவாங்க?

பின்குறிப்பு: இதெல்லாம் சினிமா பார்க்கற எல்.கே.ஜி பிள்ளை கேட்க வேண்டிய கேள்வி? நானும் அந்த வயசிலேயே இருக்கறதாலதான் இது மாதிரி சந்தேகம் வருது.. உங்க அறிவுக்கும் திறமைக்கும் இன்னும் பல டவுட்ஸ் வரும் மக்கா..

கிராமத்தானும், நகரத்தானும் (குப்பனும், பீட்டரும்)

கிராமத்தில் வாழ்கிற குப்பனும், சிட்டியில் வாழ்கிற பீட்டரும் சந்திச்சு அவரவர் வாழ்க்கை முறை பற்றி பேசுற மாதிரி ஒரு small கற்பனை.

பீட்டர்: Hey Kupps! Wassup dude ?!
குப்பன்: புரியலிங்க சாமி! தமிழ்ல சொல்லுங்க...!

பீட்டர்: வாழ்க்கை எப்படி போகுது...வருமானமெல்லாம் எப்படி?னு கேட்டேன்.
குப்பன்: நல்ல போகுதுங்க...மாசம் 3000 ரூபாய் கிடைக்குதுங்க..

பீட்டர்: என்னய்யா...3000 ரூபாய் வருமானத்துல நல்லா இருக்கேன்னு சொல்றியே...என்னை பாரு 40,000 ரூபாய் வாங்குறேன்..இதுவும் பத்தல....
குப்பன்: அடேங்கப்பா மாசத்துக்கு 40000 ரூபாயா...அதுவும் பத்தலையா?.என்னய்யா பண்ணுவீங்க அம்புட்டு பணத்தை...?

பீட்டர்: என்ன குப்பா...இப்படி கேட்டுட்ட......வாழ்க்கையை enjoy பண்ணனும் எங்கள மாதிரி..
குப்பன்: அது என்னமோங்க....சரி...அப்படி என்னங்க அனுபவிக்குறீங்க..?

பீட்டர்: வாரத்துல ரெண்டு நாள் நல்லா ஊர் சுத்துவோம், சினிமா போவோம், clubs, நீச்சல் இப்படி.....
குப்பன்: நாங்களும் வாரத்துல ஒரு நாள், ஊர் கோடில இருக்க அம்மன் கோவிலுக்கு போவோம்....தினமும் வயல்ல இருக்க கிணத்துல தான் நீச்சல் அடிக்கிறோம்...இதுக்கெல்லாம் எதுக்குங்க காசு...

பீட்டர்:நாங்க எல்லாம் குளு குளுன்னு A/C ல தான் இருப்போம்...அதெல்லாம் எப்படி வரும் காசு இல்லாம...
குப்பன்: ஹ்ம் கொடுத்து வச்சவங்க நீங்க....நம்ம வீட்ல ஒரே ஒரு fan தாங்க இருக்கு......ஆனா, என் குடிசை பக்கத்துலேயே ரெண்டு வேப்பமரம், ஜன்னல திறந்து விட்டா மின்விசிறி கூட தேவை இல்லை...சும்மா ஜம்முன்னு காற்று வரும்....

பீட்டர்: மாசத்துல ஒரு நாள் மனைவியை கூட்டிட்டு ரிசார்ட் போவேன்...நீங்கள் எல்லாம் எங்க போக போறீங்க...
குப்பன்:என் மனைவியை கூப்பிட்டுட்டு தனியா போகனும்னா....ஆற்றங்கரைக்கும்,சவுக்குத் தோப்பிற்கும், சோளக் காட்டுக்கும் போவேன்....நல்லா தாங்க ஐயா இருக்கும் .....இதுக்கெல்லாம் காசே வேணாம்யா...

பீட்டர் : யோவ் நாங்க எல்லாம் அப்ப அப்ப டின்னர்க்கு பெரிய Star ஹோட்டல் Buffetக்கு போவோம்...நீங்க...
குப்பன்: அவ்ளோ பெரிய ஓட்டல எல்லாம் நான் பார்த்ததே இல்லைங்க.....கோச்சிக்காதீங்க ஐயா... தட்டை தூக்கிட்டு சாப்பாட்டுப் பானையை தேடி தேடிப் போய் சாப்பிடுவாங்களே...அதுதானே Buffet? எங்களுக்கெல்லாம் என் அம்மா,என் மனைவி தட்டை தூக்கிட்டு வந்து ஊட்டுவாங்க ஐயா....அதுல இருக்க சந்தோஷம் Buffetல இருக்குங்களா?

பீட்டர்: வெளிநாடு போய் இருக்கீங்களா....உலகத்துல இருக்க பெரிய முதலாளிங்களோட எல்லாம் விருந்து சாப்பிட்டு இருக்கேன்...
குப்பன்: இங்க இருக்க மெட்ராஸ்க்கே போனது கிடையாதுங்கய்யா...மாசத்துல ஒரு நாள் குடும்பத்தோட, பக்கத்து ஊர்ல இருக்க என் தங்கச்சி வீட்டுக்கு போவோம்...நாட்டுக் கோழி, மீன் வறுவல்,தடபுடலா இருக்கும்...என் தங்கச்சி பொண்ணு 6 வயசு தான்...அப்படி கவனிக்கும் ஐயா எங்கள...!

பீட்டர் : ஊர்ல இருக்கிற அப்பா அம்மாக்கு வீடு, கார் வாங்கி தருவோம்...அவங்கள சந்தோஷப்படுத்துவோம்..நீங்க...
குப்பன்: வீடு வாங்கிக் கொடுக்க எல்லாம் வசதி இல்லீங்க....அப்படியே புது வீடு வாங்கினாலும், எங்க ஆத்தா அப்பன என் கூட தான் வச்சிப்பேன்ங்க...என் கூட இருக்குறதுல தாங்க அவங்களுக்கு சந்தோஷ்ம்...வேற ஒரு வீட்ல விட மாட்டேங்க ஐயா... ஒரு நாளைக்கு ஒரு 20 நிமிஷம் ஆச்சும் ஆத்தா அப்பன் கிட்ட மனசாரப் பேசி சிரிச்சா தான்யா எங்களுக்கு எல்லாம் தூக்கம் வரும்...

பீட்டர் : அப்புறம்...எங்களுக்கு ஊர்ல பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் தெரியும்...எங்க போனாலும் மதிப்பு மரியாதை..
குப்பன்: பெரிய ஆளுங்க எல்லாம் தெரியாதுங்க ஐயா....எங்க ஊர் ஜனங்க தான் எங்களுக்கு பெரிய ஆளுங்க...நீங்க ரோட்ல அடிப்பட்டு விழுந்தா, உங்க ஊர்ல எத்தனை பேரு உதவிக்கு வருவாங்க.....இங்கே எங்க கிராமத்துல, யாருக்காவது ஒரு சின்ன காயம் பட்டா கூட ஊரே வரும் உதவி செய்ய.....

இப்படி போகுது இவங்களோட வாக்கு வாதம்....
ஆக மொத்தம் கூட்டி கழிச்சு பார்த்தா....இதோங்க...ரெண்டு பேரோட மாதாந்திர செலவு கணக்கு...



பீட்டர் (40,000) குப்பன்(3000)
வாடகை ...............8000.......................இல்ல
கரண்ட் ..................1500 .........................150
க்ரெடிட் கார்ட்......10500.......................இல்ல
a/c,fridgeEMI .........5500.......................இல்ல
Inusrance/saving....6000.......................இல்ல
கேளிக்கை ............1500.........................100
வீட்டு செலவு.......8000.......................2350
மொத்தம் ............41000..................... 2600
.........................(துண்டு 1000 ரூ) ( மிச்சம் 400 ரூ)

இதுல யார் Better?

யார் நல்லா வாழ்க்கையை அனுபவிக்கிறாங்க குப்பனா பீட்டரா?

யாருடைய வாழ்க்கை முறை நமக்கு பிடிக்குது?

நிஜமான சந்தோஷம் எது?

கண்ணுக்குத் தெரியாத அல்லது இல்லாத சந்தோஷத்தைத் தேடி, இருக்கிற சந்தோஷத்தை தொலைச்சிடுறோமா?
ஒரு வேளை அக்கறைக்கு இக்கறை பச்சைன்னு சொல்றது இது தானா?

இப்படி கேள்வி மேல கேள்வி கேட்க மட்டுமே நமக்கு தெரியும்...பதில் நம்ம கைல இல்லீங்கோ.....!

குழந்தைகளை நமக்கு ஏன் பிடிக்கிறது?

அடிச்சா திரும்பி அடிக்காது

ஒரு ஊர்ல...அப்படின்னு ஆரம்பிச்சு, எவ்ளோ மொக்கை கதை சொன்னாலும் ஆர்வத்தோட கவனிக்கும்

நம்மல எதிர்த்து பேசாது

கன்னா பின்னான்னு திட்டினாலும், அழுதுட்டு, உடனே சிரித்தபடியே நம்ம கிட்டயே ஓடி வரும்

நம்ம அடிக்கிற கூத்தை எல்லாம் வெளியில சொல்லாது

என்ன நிறம்,என்ன உடை,என்ன தகுதின்னு பாக்காம, யாராக இருந்தாலும் ஒரே மாதிரி பழகும்

பொய் பேச தெரியாது

மனசுல பட்டத அப்படியே சொல்லும், உள்ளே ஒண்ணு வச்சிகிட்டு, வெளியில ஒண்ணு பேச தெரியாது

நடந்தா விழுந்துடுவோம்னு தெரிஞ்சும், விடாம முயற்சி செஞ்சிட்டே இருக்கும்

நெருப்பு சுடும்னு சொன்னாலும், சொல்றத அப்படியே நம்பாம, ஆராய்ந்து கைய வச்சு பார்த்து தான் நம்பும்

தமக்கு இஷ்டப்பட்டதை செய்யும், மத்தவங்க சொல்றத பத்தி கவலைப் படாது

அம்மா தான் உலகம்னு நினைச்சு வாழும்

இதையே தான் எல்லா சம்யங்களும், எல்லா பெரியவங்களும் நல்லா வாழ்வதற்கு வழின்னு சொல்லி இருக்காங்க.

ஆக மொத்தம் இறைவன், எல்லோரையும் நல்ல குணநலங்களோடும், பண்புகளோடும் தான் படைத்து இருக்கிறான்.சமூகம், சமுதாயம் அப்படி இப்படின்னு சொல்லி, மூளைச்சலவை செய்து,already நல்லா இருக்கிற குழந்தையை super குழந்தையாய் மாத்துறேன்னு collapse பண்றது நாம தான்.

இதை எல்லாம் யோசிக்கும் போது இந்த பாட்டு தான் ஞாபகத்துக்கு வருதுங்க.

"எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,
பின் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை(சமுதாயம்) வளர்ப்பினிலே!"

ஏன்டா...நேத்து வரைக்கும் நல்லா தானடா இருந்தே....என்னஆச்சுனு.. நீங்க கேக்கறது புரியுது....

Freea விடுங்க...Freea விடுங்க..

குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு கொத்தடிமை

இவன்
தாராளமயமாக்கலின்
தவப்புதல்வன்

கூகுள்
இவனது
குல தெய்வம்

மால்கள்
இவனது
மணி மண்டபங்கள்

வாரம்
இரு நாள்
திருவிழாக்கள்

கணிணி என்னும்
பொறியில் சிக்கிய
இன்னும் ஒரு எலி
இவன்

அப்பன் வைத்த
பெயரை
அழகாய் ஒருவன்
கொலை செய்தாலும்
அட்டகாசமாய் புன்னகைக்கிறான்

ஐந்திலக்கச் சம்பளம்
நோக்கி
அடிக்கக்கடி
அரசியல்வாதியாகிறான்

அமெரிக்காவில்
இடி இடித்தால்
இங்கு இவன்
குடை பிடிக்கிறான்

உறக்கம் விற்று
கனவுகள்
வாங்குகின்றான்

மொத்தத்தில்
குளிரூட்டப்பட்ட அறையில்
அடைக்கப்பட்டிருக்கும்
ஒரு
கொத்தடிமை
இவன் !

இவன் யார் ??










































நான் தான் அந்த "இவன்" ! ! !

காரணம் கொண்டு வருவதா காதல் ! !

அப்போது நான் அவளுக்கு புதியவன்!
பழகிய கொஞ்ச நாட்களிலேயே
என் வரையரைற்ற காதலுக்கு
காரணம் கேட்டாள்!

அப்போது கவிதையும் தெரியாது எனக்கு !
எனவே, வார்த்தைகளையும் காரணத்தையும்
தேட வேண்டி இருந்தது !

தேடியதும் சொன்னேன்!
"எங்கிருந்தோ வருகிற
ஊர்பேர் தெரியாத காற்று
உன்னிடம் அனுமதி வாங்கிக்கொண்டா
உன்னை வாழ வைக்கிறது ?
"நானும் காற்று தான் என்று !

லீவ் லெட்டர்.....

ஹைய்யோ ஹைய்யோ,லீவ் லெட்டர் எழுதி இவனுக எப்படி எல்லாம் டார்ச்சர் கொடுக்கரானுக.....பாவம் அந்த ஹெட் மாஸ்டர் அப்புறம் மேனேஜர்.....
ஒரே காமெடி தான் போங்க....

சரி சரி,அதன் originality கெட கூடாதுன்னு ஆங்கிலத்தில் கொடுத்து உள்ளேன்.....
(உங்களுக்கு எந்த லெட்டர் பிடித்து இருந்தது?)


written by people in
various places of India ...

1. Infosys : Bangalore: An employee applied for leave as follows: Since I have to go to my village to sell my land along with my wife, please sanction me one-week leave.

2. This is from Oracle Bangalore: >From an employee who was performing the "mundan" ceremony of his 10 year old son:"as I want to shave my son's head, please leave me for two days.."

3. Another gem from CDAC. Leave-letter from an employee who was performing his daughter's wedding:
"as I am marrying my daughter, please grant a week's leave.."

4. From H.A.L. Administration dept: "As my mother-in-law has expired and I am only one responsible for it,
please grant me 10 days leave."

5. Another employee applied for half day leave as follows: "Since I've to go to the cremation ground at 10 o-clock and I may not return, please grant me half day casual leave"

6. An incident of a leave letter "I am suffering from fever, please declare one day holiday."

7. A leave letter to the headmaster: "As I am studying in this school I am suffering from headache. I request
you to leave me today"

8. Another leave letter written to the headmaster: "As my headache is paining, please grant me leave for the day."

9. Covering note: "I am enclosed herewith..."

10. Another one: "Dear Sir: with reference to the above, please refer to my below..."

11. Actual letter written for application of leave: "My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave".

12. Letter writing: - "I am in well here and hope you are also in the same well."

13. A candidate's job application: "This has reference to your advertisement calling for a 'Typist and an Accountant - Male or Female'... As I am both(!! ) for the past several years and I can handle both with good experience, I am applying for the post.லீவ் லெட்டர்.....

கணிப்பொறி

நான் கண்களில் கனவுகளைத் தேக்கி வைத்துக் கொண்டு கவிதைகளில் விடியல் தேடும் ஒரு கனாக்காதலன்.

கணிப்பொறி படித்துவிட்டு கணினி என்னும் எந்திர பொறியில் சிக்கிக் கொண்ட இன்னும் ஒரு எலி நான்.

அமெரிக்கர்களின் வளமை பசிக்கு எனது அறிவை தீனி போடும் ஒரு பொருளாதார அடிமை நான்.

எனது கைகளைச் சுற்றும் உரிமை கூட அடுத்தவர்கள் மீது படும் வரை தான் என்ற அடிப்படை நாகரிகம் கற்றுக் கொடுக்கப்பட்டவன். எனவே எனது எழுத்தும் சுதந்திரமும் யாரையும் புண்படுத்தவோ,புறஙகூறவோ அல்ல (பண்படுத்தவும் அல்ல). பொழுது போக்கவும் சில நேரங்களில் புலம்பித் தீர்க்கவும் மட்டுமே!

நம்பருக்கு பொறந்தவிய்ங்க!

பிறந்ததும் படுக்கை நம்பர்,
படிக்கையில் மார்க் நம்பர்,
பரிட்சையில் ரோல் நம்பர்,
பதினெட்டானா வோட்டர் கார்ட் நம்பர்,

வேலை தேட எம்ப்ளாய்மென்ட் நோட்டீஸ் நம்பர்,
வேலை கிடைச்சா எம்ப்ளாயீ நம்பர்,
வண்டி வாங்கினா ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர்,
இன்சூரன்ஸ் எடுத்தா பாலிசி நம்பர்,

அட்டண்டன்ஸ் போட ஐடி கார்ட் நம்பர்
சம்பளம் போட அக்கவுண்ட் நம்பர்,
பணமெடுக்க ஏடிஎம் பின் நம்பர்,
டிவி பார்க்க ரிமோட்டில் நம்பர்,

பஸ்,ரயில்,விமானமும் ஏதோ ஒரு நம்பர்,
ரிசர்வேசனுக்கு பிஎன் ஆர் நம்பர்,
உக்கார படுக்க இருக்கை நம்பர்,
உரையாட செல்ஃபோன் நம்பர்,

கட்டுற வரிக்கு பான் நம்பர்,
கட்டாத வரிக்கு பெனால்டி நம்பர்,
கடன் வாங்க கிரெடிட் கார்ட் நம்பர்,
கடுதாசு அனுப்ப வீட்டு ந‌ம்ப‌ர்,

சூதாட‌ப் போனா அதுக்கும் ந‌ம்ப‌ர்,
விளையாட‌ப் போனா ஜெயிப்பதும் ந‌ம்ப‌ர்,
ட‌ய‌ப‌டீஸ், ர‌த்த‌ அழுத்த‌முன்னு அதுவும் ந‌ம்ப‌ர்,
டாஸ்மாக் போனாலும் தள்ளாடும் ந‌ம்ப‌ர்,

தப்புத் தண்டாக்கு இபிகோ நம்பர்,
ராசி பேர்வைக்க‌ நியூமராலஜி நம்பர்,
இதெல்லாம் கடந்தும் இழுத்துகிட்டிருந்தா,
டாக்ட‌ர் சொல்லுற‌ கெடுவும் ந‌ம்ப‌ர்,

இந்தப் பொழப்பு பொழைக்கறதுக்கு,
ங்கொய்யால போட்டு தள்ளிட்டு ,
ஜெயில்ல இருக்கிறவன் குடுத்து வ‌ச்ச‌வ‌ன்!
ஒரே ந‌ம்ப‌ர்! அதுவும் அர‌சாங்க‌ம் க‌வ‌ன‌ம் வெச்சுக்கும்!

தமிழனின் கெத்து

மைக்ரோசாஃப்டின் ஐரோப்பிய தலைமையகத்துக்கு ஒரு தலைமை நிர்வாகி தேவைப்பட்டது. ஆகவே ஒரு பெரிய walk in நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தார். 5000 பேர் குழுமினர்.

அவர்களில் ஒருவன்தான் நம்ம ராமசாமி.

பில் கேட்ஸ்: இவ்வளவு பேர் வந்ததுக்கு மிக்க நன்றி. “ஜாவா தெரியாதவங்க எல்லாம் தயவு செய்து போயிடுங்க”
உடனே 2000 பேர் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

ராமசாமி நினைக்கிறான், 'ஜாவாவா? அப்படீன்னா என்ன? அதனால என்ன இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!'

பில் கேட்ஸ்: குறைந்த பட்சம் 100 பேரையாவது மேய்த்து வேலை வாங்கியவர்கள் மட்டும் இருக்கவும்.
அடுத்த 2000 பேர் உடனேயே போயிடறாங்க.

ராமசாமி நினைக்கிறான், 'யாரையும் நான் மேய்ச்சதில்லைதான். அதனால என்ன இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!'

பில் கேட்ஸ்: மேலாண்மை டிப்ளமாக்கள் இல்லாதவர் எல்லாம் தயவு செய்து போயிடுங்க.
உடனே 500 பேர் இடத்தை காலி செய்யறாங்க.

ராமசாமி நினைக்கிறான், 'நான் பி.யு.சி.-யோட படிப்பை விட்டாச்சு. அதனால என்ன, இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!

கடைசியா, பில் கேட்ஸ் சொல்லறாரு, ‘செர்போ-குரோஷிய மொழி பேசத் தெரியாதவங்க இங்கே வேண்டாம்’.

இப்போ 498 பேர் போயாச்சு.

ராமசாமி நினைக்கிறான், 'செர்போ-குரோஷிய மொழி பேசத் தெரியவே தெரியாதுதான். அதனால என்ன இருந்துதான் பார்ப்போமே. கழுத்தையா சீவிடுவாங்க!

கடைசியா ராமசாமியும் இன்னும் ஒரே ஒரு ஆளும்தான் இருக்காங்க; மீதி எல்லோரும் போயாச்சு.

இப்போ பில் கேட்ஸ் இவங்க கிட்டே வரார். “அப்போ ஒங்க ரெண்டு பேருக்குத்தான் 'செர்போ-குரோஷிய மொழி பேசத் தெரியும் அல்லவா. எங்கே ரெண்டு பேரும் அந்த பாஷையிலே ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கோங்க’.

அசால்ட்டா ராமசாமி அந்த இன்னோரு ஆளைப் பார்த்து பேசுகிறான், ‘நான் ராமசாமி, வத்தலகுண்டு சொந்த ஊரு. நீங்க எந்தப் பக்கம்’.

இன்னொரு ஆள் சொல்றான், ‘நான் கிருஷ்ணசாமி, கும்பகோணம் பக்கம்’

காதல் எனப்படுவது யாதெனில்?

கிராமியக் காதல் எனப்படுவது யாதெனில்

களத்துமேடு கம்மாக்கரைன்னு
களம் கண்ட இடத்திலெல்லாம்
காதல் சாகுபடி செய்வது

நகரக்காதல் எனப்படுவது யாதெனில்

பிஸ்ஸா கார்னர்
தியேட்டரில் கார்னர்
எனக் கையாலும் காதல்
செய்வது

தெய்வீகக் காதல் எனப்படுவது யாதெனில்

ப்ரதோஷம் ப்ரம்மதரிசனம்னு
பக்திப்பழமா கதைவிட்டு
சூடக்காற்றில் காதல்
ஜோதி ஏற்றுவது

கடலோரக் காதல் எனப்படுவது யாதெனில்

அடிக்கிற வெயில் கந்தகமா எரிஞ்சாலும்
கோமியமா மழை கொட்டுனாலும்
எவன் பார்த்தா எனக்கென்ன எனக் கவலையின்றி
துப்பட்டாவுக்கடியில் காதலில் எரிவது

இலக்கியக் காதல் எனப்படுவது யாதெனில்

தெரிஞ்சது டார்டாய்ஸ் கொசுவர்த்திச்சுருள்னாலும்
லியோ டால்டாய்ஸ் எனக்கு மச்சான்ங்கற
ரேஞ்சுக்கு அகநானூறும் அல்வா ஐநூறும் விட்டு
காதல் வளர்ப்பது !

காதல் கவிதை எனப்படுவது யாதெனில்

தான் காதலித்தவளை(ரை ) நினைத்து
கணவன்கள் (மனைவியர்)
எழுதுவது !

காதலில் நண்பன் எனப்படுபவர் யாவரெனில்

காதலி மாட்டினால் அவன் கொடுக்கும்
பார்டியில் 4 லார்ஜ் அடிப்பவன்
காதலி அப்பீட் ஆனால்
அவன் கொடுக்கும் பார்ட்டியில்
4 லார்ஜ் அடிப்பவன்

அமரக்காதல் எனப்படுவது யாதெனில்

இருவரும் திருணம் செய்துகொள்வது
வெவ்வேறு ஆட்களை!

காதலில் தோல்வி எனப்படுவது யாதெனில்

காதலித்தவளை(ரை)யே
திருமணம் செய்து கொள்வது


காதல் தோல்வி எனப்படுது யாதெனில்

தாடி வளர்த்துக்கொள்வது
அடுத்த அழகான பெண்ணைப்
பார்க்கும் வரை !

காதலில் Living together எனப்படுவது யாதெனில்
Make Love
Not Babies
என்ற தத்துவ ரகத்தைச் சார்ந்தது !



ஏதோ என்னால முடிஞ்சவரை சொல்லியிருக்கேன். வழக்கம் போல ஜாலியா எடுத்துக்குங்கப்பு ! தேவையில்லாம செருப்பு, முட்டை, தக்காளிகளை வீசி உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்ணிடாதீங்கோவ் ! கொஞ்சம் உங்களுக்கும் தெரிஞ்சதை அள்ளித் தெளிச்சீங்கன்னா நானும் சந்தோஷபடுவேன்!

ஐயோ ஐயோ. சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதே! நீங்களும் படிங்க

நண்பர்களே, நானும் பொறுமையா இருக்கனும்னு தான் பாக்கறேன்... ஆனா நம்மல விட மாட்டானுங்க போலிருக்கே...

எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...
வாழ்க்கை முழுக்க ஒரே டென்ஷன் மயமா இருக்குல்ல? கொஞ்ச நேரம் இத படிச்சு சிரிச்சுட்டு போய் திரும்ப டென்ஷன் ஆகுங்க...

1.
nee alaga iruukanu nenikala anna
ahtuellaam nadathrumu payama irkku
hi how r u?
just fun crazy introdution.
HOW IS IT.

மானங் கெட்ட நாயே, நீ கெட்ட கேட்டுக்கு மாதவன் டயலாகா?! இதுல ஹவ் இஸ் இட் வேற? நல்லா இல்லைன்னு சொன்னா தூக்கு மாட்டிக்க போறியா?!

2.
had to tell you this....you just remind of somebody, whom i thought i should forget.....but still i felt happy lookin at your face. If you understand tamil....

Nallathor veenai saeithaen athai nalamkaeda puzhithiyil aerivathundo?

நாயீ, எதுக்கெல்லாம் பாரதியார் பாட்டை இழுக்குது பாருங்களேன். தமிழ் பற்று இருக்கற நாலு பேரு பார்த்தா ரத்தக் கண்ணீர் விடுவாங்க. இந்த ஸ்கிரேப்பைப் பார்த்தா பாரதி படத்துல சாயஜி ஷிண்டே போன கழுதை கூட விக்கி விக்கி சாகும்.

3.
hi
This is Karthik from chennai adayar workng in sutherland.
If u like my pic just scrap me. lets hav a nice time
add me in yahoo messenger.
guy****@yahoo.com
i come with cam from 8.30 to 9.30am daily.
lets hav a nice time
scrap me. i giv u my mobile number. nama meet panalam. vanga

8.30 to 9.30 கேமரா புடிப்பேன்னா அதுக்கப்புறம் விளக்கு புடிப்பியா? உன்னைய விளக்குமாத்தால அடிச்சு விளக்கு (கேமரா?) புடிக்கற கைக்கு விலங்கு மாட்டி, மகளிர் காவல் நிலையத்துல அண்டர் வேர்/அரணாக்கயிறோடா உக்கார வெச்சு ரிவிட் எடுக்கணும். படுவா, வந்துட்டான்...

4.
hello shaline tell me about ur climate there

கிளைமேட் தெரிஞ்சா என்ன ராக்கெட் விடப் போறியா?

5.
hai, i've not yet put a scrap tu u.
first one

இவரு பெரிய கணித மேதையாத்தான் இருக்கணும். இல்லேன்னா, நம்ம தமிழ் நாட்டுல கேப்டனைத் தவிரா யாரால இப்படி புள்ளி விவரம் தர முடியும்? இதுக்கென்ன கேக் வெட்டி, விழா கொண்டாட சொல்லறியா? ச்சீ, ஓடிப் போ...

6.
can i have this kutti pisasu as my friend???????????????????????????

தம்பி, பிசாசுகூட ஃபிரெண்டு ஆகணும்னா சுடுகாட்டுக்கு போ, இங்க ஏன் வந்து மொக்க போடுற? பெரிய குடுகுடுப்பைக்காரானா இருப்பான் போலிருக்கே?

7.
Hi Dear friend,

This is Raghu from chennai working as a Soft eng.

i like to have friendship with u.

my mail id : raghu****@gmail.com

i am expecting ur reply

take care

- Raghu

டேய், இதென்ன ஃபிரெண்ட்ஷிப் ரிக்வெஸ்டா? இல்ல, லீவ் லெட்டரா??
எடுக்கறது பிச்சை... இதிலென்ன ஃபார்மல் லெட்டர்?

8.
hi vaisu,

how r u.how is ging u r life da.if u don mine. can v be a frnds.
reply as soon as
takecare
bye

இது வரைக்கும் நல்லாத்தான் இருந்திருக்கும். நீ ஃபிரெண்ட் ஆனதுக்கப்புறந்தான் நாசமாப் போகும். இதுல ,"if u don mine".. 'mine'க்கும் ,'mind'க்கும் வித்தியாசம் தெரியாதா மண்ணாங்கட்டி மண்டையா?

9.
r u BCCCCCCCCCCCCCCCCCCCC

ஏன், BC -ல இருந்தா அர்ஜீன் சிங்கிட்ட சொல்லி சீட் வாங்கித் தரப்போறியா?

10.
ur name s nice mrs.mosquito bite crazzyyyy.....

ஏன்டா, "கொசுக்கடி"ங்கறது நல்ல பேரா? வேணும்னா, உன் குழந்தைக்கு வைச்சுக்கவேன்???

> இன்னும் முடியல. நெறைய இருக்கு. பார்ட் 2அ அடுத்த மெயில்ல அனுப்பறேன். கண்டிப்பா படிங்க. ரெண்டையும் படிச்சுட்டு சொல்லுங்க.

ஜில்லுன்னு 5 doubts கண்ணுங்களா ! ! !

என் சந்தேகங்களை அப்படியே அள்ளித்தெளிக்கிறேன் முடிஞ்சா தீர்த்து வைங்க தீர்தயாத்திரை பெரியோர்களே தாலாட்டும் தாய்மார்களே ( மரியாதை மரியாதை ) !!


1) சேலை கட்டுனா இடுப்பு தெரியுது வயிரு தெரியுதுன்னு சுடிதாருக்கு மாறுனீங்களே கண்னுங்களா இப்போ அந்த சுடியிலேயும் Short சுடின்னு இடுப்புக்கு ஒரு ஜாண் மேல இருந்து கிழிச்சு விட்டுகிட்டு என்னைய மாதிரி அப்புறாணியோட கண்ணை கன்னா பின்னான்னு அலைபாய விடுறீயளே ஏங்க ஜீன்ஸ் போட்ட மகாலட்சுமிகளே இது நியாயமா ?

2) மொதோ வருசத்துல இருந்து பின்னாடியே நாயா சுத்திகிட்டு உங்களுக்காக வாலிப சந்தோசங்களான தம்மு தண்ணியெல்லாம் தியாகம் பண்ணிட்டு கலியுக முனிவர்களா சடாமுடியோட தெய்வீக காதலோட உங்களையே அம்பாளா நெனச்சு சுத்திகிட்டு இருக்கற அப்பாவி அய்யாசாமிகளை விட்டுட்டு பல்சரில் படம் போட்டுகிட்டு சாயங்காலம் ஆனா ‘கட்டிங்’ தெனம் அஞ்சு பாக்கெட் சிகரெட்டை அல்டாப்பா சாம்பலாக்குற அல்வா வாயன்களோட அலப்பறையா பில்லியனில் குந்திகினு போறீயளே இது ஞாயமா ? அதெப்படீங்க நீங்க மட்டும் ரொம்ப கரெட்டா ‘தப்பான’ ஆளை தேர்தெடுக்கறீங்க ?

3) உங்களுக்கு வாங்கி குடுக்குற ஒரு ‘பட்டர் பாப்கார்ன்’ ரேட்டுக்கு எங்க மெஸ்ஸிலே ஒரு அன்லிமிட்டட் மீல்ஸ்சயே ரவுண்டு கட்டு அடிக்கலாம்னு உங்களுக்கு தெரியுமா ? எங்களுக்கெல்லாம் ராவா ‘கோக்’ கை முக்கி முக்கி குடிச்சாலும் ரெண்டு நிமிஷத்துக்கு மேல குடிக்க முடியலையே ?? அதிலே எப்பவாச்சும் ஒரு 60 மிலி கலந்தா வேணா ஒரு 10 நிமிஷத்துக்கு ஒப்பேத்தலாம் !! ஆனா ஒரு 300 மிலி கோக்கை வாங்கி வச்சுகிட்டு எப்படீங்க 3 மணி நேரத்துக்கு குடிச்சுகிட்டு இருக்கீங்க? சொட்டு நீர் பாசனம் போல ‘சொட்டுகோக்’ பாசனம்னு புதுசா ஏதாசும் கத்துகிட்டு வந்துருக்கீயளா?

4) எங்களூக்கெல்லாம் கொட்டாவி விடவே வாயை திறக்க முடியலே. ஆனா எப்பவும் ப்ரெஷ்ஷா FM ரேடியோ மாதிரி 24 மணி நேரமும் பேசிகிட்டே இருக்கீங்களே உங்களுக்கெல்லாம் வாயே வலிக்காதா ? அடுத்தவன் பேசனும் நாம கேட்கணும்னு எப்போவாசும் நெனச்சு பார்த்து இருக்கீங்களா??

5) பொறக்கும்போதே கவச குண்டலடத்தோட பொறந்த மாதிரி எந்த நேரமும் செல்போனும் காதுமா கலக்குறீங்களே நெசமாலுமே பேசறீங்களா இல்லை பேசற மாதிரி படம் காட்டறீங்களா? அதெப்படீங்க கரெட்டா நாங்க pass பண்ரப்போ மட்டும் கஸ்மாலம் பேத்துருவேண்ணு பேத்தனமா செல்போன்ல திட்ட ஆரம்பிக்கிறீங்க ?

இப்போதைக்கு இவ்ளோ போதுங்க ! எல்லாமே என்னோட மற்றும் நம்ம குடிமகன்களோடcஞாயமான சந்தேகம் தானுங்க. படிச்சுபுட்டு அப்புறம் தாய் குலங்களெல்லாம் என் முதுகுலே தீபாவளி கொண்டாடிறாதீங்க . முடிஞ்சா பதில் சொல்லுங்க. இல்லாகாட்டி ஓரமா ஒக்காந்து உங்க சிந்தனைக் குதிரையோட வாலை திருகிவிட்டு பாருங்க. ஏதாச்சும் பதிலு கெடைக்காமலா போய்டும்?

Software Lollu

டேய் மச்சான், இன்னைக்கு திடீர்னு எங்க க்ளைண்ட் எங்க கம்பெனில எல்லா அக்கௌண்டையும் க்ளோஸ் பண்ணிட்டாண்டா. என்ன பண்றதுனு எல்லாரும் டென்ஷனா இருக்கும் போது எங்க ஹெச்.ஆர் என்னை கூப்பிட்டான். நானும் சரினு போனேன். அப்ப என்னை பார்த்து,

”என்னங்க சிவா இப்படி ஆகிடுச்சி, படுபாவி பசங்க. எல்லாருமே சேர்ந்து உங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்களே! சீட்டுக்கு போய் என்ன பண்ண போறீங்க சிவா, டெஸ்டிங் பண்ண போறீங்களா? மெயிண்டனன்ஸா இல்லைனா ஏதாவது ஜாவா கோடிங்... இல்லை நான் வேணா ஏதாவது கால் சென்டர்ல சொல்லி வேலை வாங்கி தரதா?
ஐயய்யோ ஆனா அதுக்கெல்லாம் முன் அனுபவம் வேண்டுமே. உக்கார்ந்த இடத்துலே நோகாம நோம்பு கும்பிடற ஒரு வேலை இருக்கு செய்யறீங்களா? அதான் Naukriல ரெஸ்யூம் போட்டு வேலை தேடறது.” அப்படினு சொல்லிட்டாண்டா...

.......

எனக்கு ரெசஷன் பயத்தை காட்டிட்டானுங்க பரமா. அவுங்களுக்கு ஏதாவது பண்ணனும் பரமா. ஏதாவது பண்ணனும்.

.......
ஏன்டா பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?

கூட வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரமாக்ஸ் லைட்டு கொடுக்கறது இல்லைங்கற மாதிரி, சாப்ட்வேர் இஞ்சினியருங்களுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்கறதில்லைனு சொல்லிட்டானுங்கடா...

......
மக்கள் உணர்ந்து கொள்ள இது 2000 ரெசஷனல்ல... ரெசஷனல்ல... ரெசஷனல்ல...
அதையும் தாண்டி மோசமானது.

......
உண்மை கம்பெனி க்ளைண்ட்ஸ்க்கு நாங்க ப்ராஜக்ட் பண்ண மாட்டோம்னு எங்க சொன்னோம். க்ளைண்ட்ஸா வந்து எங்ககிட்ட பிராஜக்ட் கொடுத்தா நல்லா இருக்கும்னு சொன்னோம்

கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!!

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II

நம்ம டவுசர் புகழ் கி"ராமராஜன்" ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்.
ராமராஜன் - CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர்.
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.
====================================
காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள். மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள்.

ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க!!!

கவுண்ட்ஸ்: என்ன தம்பி அப்படி சொல்லிட்ட. இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை.

ரா.ரா: யார் யாரு???

கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க! அப்பறம் டி.சி.எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ-கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு!!!

செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார்.

கவுண்ட்ஸ்: யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட...

ரா.ரா: ஏன்ன அடிச்சிங்க???

கவுண்ட்ஸ்: ஏன் அடிச்சனா? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட???
....

2 நிமிடம் கழித்து

கவுண்ட்ஸ்:அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா?

1 நிமிடம் கழித்து:

கவுண்ட்ஸ்: ஹும்!!! ஐயோ!!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது.

ரா.ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான்?

கவுண்ட்ஸ்: என்ன கேட்டானா? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம்... ஐ-கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான்.

ஜி.பாலையா: ஹாஹாஹா

கவுண்ட்ஸ்: அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை. இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.

============================================

காட்சி - 2:
செந்தில் கோட்(Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வெலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.

புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...

கவுண்ட்ஸ்: ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன...ஏய் சொல்லு...சொல்லு

புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!

கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!! (செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?

செந்தில்: ஒரு விளம்பரம்தான்...

கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
(சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????

கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்...

கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ, நியூ யார்க்ல IBMல கூப்டாகோ.... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?

கோ.சரளா: ஹிக்க்க்க்ம்...இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை...

கவுண்ட்ஸ்: ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!

ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்...

செல்ஃபோனில் காதலித்துப்பார்..

செல்ஃபோனில் காதலித்துப்பார்..
உன்னைச் சுற்றி ஈக்கள் மொய்க்கும்
உலகம் உன்னையே பார்க்கும்
தொலைபேசிக் கட்டணத்தின் பெறுமதி விளங்கும்
உனக்கும் வறுமை வரும்
கடன்கள் அதிகமாகும்
ரீசார்ஜ் கடைக்காரன் கடவுளாவான்
உன் விரல்கள் பட்டே (தொலைபேசி) இலக்கங்கள் அழியும்
காதிரண்டும் செவிடாகும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்


குப்பை மேட்டில் நின்று கதைப்பாய்
பல நாற்கள் குளிக்கமாட்டாய்
Call வராவிட்டால் நிமிசங்கள் வருசமென்பாய்
வந்துவிட்டாள் வருசங்கள் நிமிசமென்பாய்.
இந்த உலகமே உன்னைப் பைத்தியக்காரணாய்ப் பார்க்கும்
ஆனால் யாருமே பார்க்காததுபோல் உணர்வாய்
வீட்டுக்கும் ரோட்டுக்கும் பேயன்போல் நடந்து திரிவாய்
இந்த ஃபோன், இந்த சிம், இந்த ரீசார்ஜ் எல்லாமே காதலுக்குதவும் ஏற்பாடென்பாய்.
செல்ஃபோனில் காதலித்துப்பார்


உன் ஃபோன் அடிக்கடி சார்ஜில் கிடக்கும்
பேரிரைச்சல் கொண்ட நேரத்தில்கூட அவள் மிஸ்கோர்ள் மட்டும் தெளிவாய்க் கேட்கும்
உன் ஃபோனே பெட்ரி டவுன்னாகி
உனக்கு ஆப்படிக்கும்
உன் பல மணிநேரங்களை அது விழுங்கும்
ஃபோன் கட்டணம் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உன் பாக்கெட் மட்டும் சஹாராவாகும்.
Miss Call வராவிட்டாள் பைத்தியம் பிடிக்கும்
Miss Call வந்துவிட்டால் பைத்தியம் அடங்கும்.
செல்ஃபோனில் காதலித்துப்பார்


கடன்களை வாங்கி வாங்கியே ரீசார்ஜ் பண்ண உன்னால் முடியுமா?
Out Goingஉம் SMSஉம் அவளிடமிருந்து வந்ததுண்டா
Call waiting போய் சண்டைகள் வந்ததுண்டா
கவரேஜ் இல்லா நேரங்களில் கூரைமேல் ஏறிப் பேசத் தெரியுமா
சபையிலே மெதுவாகவும்
தனிமையிலே உருகி உருகியும் பேச
உன்னால் ஒன்னுமா
ஃபோன் சூடாகவேண்டுமா
ஐந்தங்குல இடைவெளியில் சாப்பாட்டுக் கடையிருந்தும்
பட்டினி கிடந்து (ரீசார்ஜ் செய்ய) காசு சேர்த்துப் பழகியதுண்டா
தொலைபேசியில் காதலித்துப்பார்


மொபிடெல் (சிம்) கம்பெனிக்காரன் வாழவேண்டுமே அதற்காகவேனும்
Nokia (ஃபோன்) கம்பெனிக்காரன் பிழைக்கவேண்டுமே அதற்காகவேனும்
டயலொக் சிம்முக்கும்
மொபிடெல் சிம்முக்கும்
கட்டண வித்தியாசம் விழங்குமே அதற்காகவேனும்
கழிவறையில் உற்காந்து கொண்டு பேசவும் முடியுமே
கட்டாந்தறையில் படுதுக்கொண்டும் பேச முடியுமே அதற்காவேனும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்


பெற்றோர் உன்னிடம் சண்டைபிடித்தாலும்
உறவுகள் கேவலமாய்ப் பேசினாலும்
தொலைபேசிக் கட்டணம் எவ்வளவுதான் எகிறினாலும்
ஃபோன் எவ்வளவுதான் சூடானாலும்
நீ நேசிக்கும் அவள் உனக்கு மிஸ் கோர்ள் பண்ணாமல் விட்டாலும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
நீ பிச்சக்காரனாவாய் இல்லை கடன்காரணாவாய் இரண்டில் ஒன்று
உனக்கு நிச்சயம்
செல்ஃபோனில் காதலித்துப்பார்



பி.கு:
1. இது miss call மட்டுமே கொடுக்கும் காதலிகளுக்கும், Out going பண்ணிப் பண்ணியே ஓட்டாண்டியான காதலர்களுக்கும் சமர்ப்பணம்.

வடிவேலு IT கம்பெனியில் வேலை பார்த்தால்!!!

இன்று காலையில் எனக்கு வந்த மெயில் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இது யாரோ ஒரு புண்ணியவானின் கற்பனை.

***********

எப்புடி?

Login - சொல்லவே இல்லை



Training - முடியல



New product - உட்கார்ந்து யோசிப்பாங்களோ



Concall - வொய் பிளட், சேம் பிளட்



Review - இப்பவே கண்ணை கட்டுதே



Daily report - எதையுமே ப்ளேன் பண்ணாம பண்ணக்கூடாது



Commitment - ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு, ஆனா பினிஸிங் சரியில்லையேப்பா



Project manager - ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்புடுற மாதிரி



Regional Project Manager - என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே



HR Manager - கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா,
இந்த கோட்டைத் தண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன். பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்



Supply Chain Manager - வேணா வலிக்குது அழுதுடுவேன்



Admin Manager - ஐய்யையோ, வடை போச்சே



Sales Manager - நா ரவுடி, நா ரவுடி, நா ரவுடி, நான் ஜெயிலுக்கு போறேன், ன் ஜெயிலுக்கு போறேன், நான் ஜெயிலுக்கு போறேன்



Marketing Manager - இது வாலிப வயசு, பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்கு



Finance Manager - என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்யா



Circle Business Head - பாவம் யாரு பெத்த பிள்ளையோ தனியா பொலம்பிட்டு இருக்கு



Promotion to you - வரும், ஆனா வராது



Atlast, Customer - மாப்பு, மாப்பு, வைச்சுட்டான்யா ஆப்பு

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!





ஒன்பதரை மணி காலேஜிக்கு

ஒவ்வொருத்தனா கெளம்பும் போது

ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்

ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ

அரை குறையா குளிச்சதுண்டு

பத்து நிமிஷ பந்தயத்துல

பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்

பந்தயத்துல தோத்ததில்ல,

லேட்டா வர்ற நண்பனுக்கு

பார்சல் மட்டும் மறந்ததில்ல!

விறுவிறுன்னு நடந்து வந்து

காலேஜ் Gate நெருங்குறப்போ

'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு

ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,

வேற எதுவும் யோசிக்காம

வேகவேகமா திரும்பிடுவோம்

வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,

இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!

'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா

கடங்கார professor கழுத்தறுப்பான்...

assignment எழுதாத பாவத்துக்கு

நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,

கூத்து கும்மாள குறையுமில்ல,

எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா

H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா

அத அடிப்பான் காபி அந்தபக்கம்...

ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து

ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

பசியில யாரும் தவிச்சதில்ல

காரணம் - தவிக்க விட்டதில்ல...

டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்

சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!

அம்மா ஆசையா போட்ட செயினும்

மாமா முறையா போட்ட மோதிரமும்

fees கட்ட முடியாத நண்பனுக்காக

அடகு கடை படியேற அழுததில்ல ...

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்

சாதி சமயம் பாத்ததில்ல,

மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்

முகவரி என்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலன்னாலும்

பிரிச்சி வச்சி பாத்ததில்ல...

அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்

அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

வேல தேடி அலையுறப்போ

வேதனைய பாத்துப்புட்டோம்

'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே

மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு

ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ

மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல

கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...

பக்குவமா இத கண்டும் காணாம

நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ

'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு

சமாளிச்சி எழுந்து போவோம்...

நாட்கள் நகர,

வருஷங்கள் ஓடுது,

எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது

"Hi da machan... how are you?" வுன்னு...

தங்கச்சி கல்யாணம்,

தம்பி காலேஜி,

அக்காவோட


சீமந்தம்,

அம்மாவோட ஆஸ்த்துமா,

personal loan interest,

housing loan EMI,

share market சருக்கல்,

appraisal டென்ஷன்,

இந்த கொடுமையெல்லாம் பத்தாம

'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு

இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,

எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,

நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!

இ-மெயில் இருந்தாலும்

இண்டர்னெட் இருந்தாலும்

கம்பெனியில ஓசி phone இருந்தாலும்

கையில calling card இருந்தாலும்

நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல

நண்பனோட குரல கேக்க

நெனச்சாலும் முடியறதில்ல

பழையபடி வாழ்ந்து பாக்க!

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்

orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்

'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்

'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..

இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!

கல்யாணத்துக்கு கூப்பிட்டு

வரமுடியாமா போனாலும்,

அம்மா தவறின சேதி கேட்டதும்

கூட்டமா வந்தெறங்கி,

தோள் குடுத்து தூக்கி நிறுத்தி

பால் எடுத்தவரை கூட இருந்து

சொல்லாம போக வேண்டிய இடத்துல

செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்

தேசம் கடந்து போனாலும்

பாசம் மறந்து போகாது!

பேசக் கூட மறந்தாலும்

வாசம் மாறி போகாது!

வருஷம் பல கழிஞ்சாலும்

வரவேற்பு குறையாது!

வசதி வாய்ப்பு வந்தாலும்

'மாமா' 'மச்சான்' மாறாது!


எங்ேகா பிறந்ேதாம்!

எங்ேகா எஙே்கா வளர்நே்தாம்!
.
இங்ேக (orkut) சந்தித்துக் ெகாணே்டாம்!

இதயத்ைத நட்பால சிந்தித்துக ெகாண்ேடாம்!

முகங்கைளப் பற்றி ேயாசித்ததுமில்ைல!

இனம் பணம் பார்த்து ேநசித்ததுமில்ைல!

எதிர் பார்ப்புகள் எதுவுமிலை்ல!

அவரவர் கருத்துக்கைள இடம் மாற்றிக்க ெகாளே்வாம்!

பாரட்டுக்கைள பரிமாறிக்க ெகாள்ேவாம் !

சீக்கிரத்திேலேய சமாதானத்திற்கு வருேவாம்!

இலட்சியஙகைள ெசால்லி மகிழ்ேவாம்!

உைழபை்ப பெருக்க உற்சாகம் தருேவாம்!

நலத்ைத பெருக்க நம்பிகை்க தருேவாம்!

நனை்மகள் வளர முயற்சிப்ேபாம்!

நட்பால் உயர்ந்து சாதிபே்பாம்......

***************************************************
நட்பே.... நீ எனக்கு நட்பாக வேண்டும

அகமதாபாத் சில குறிப்புகள்

நா அகமதாபாத் வந்து ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சு. என்னோட இந்த ஊர் அனுபவங்கள், இந்த ஊர் எப்படி என்பதை எல்லாம் சொல்லனும்னு தோணுது. அதுக்காக தான் இந்த eமெயில்.

அகமதாபாத்தில் பிடித்தது,
1. அழகா,அம்சமா செக்க செவேல்னு சேட்டு பொண்ணுங்களோட குழந்தைங்க.
2. மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்கள்.அதுவும் டீஸல் இல்லாமல் CNG யில்.
3. மதுவிலக்கு மாநிலம்,, நோ டாஸ்மாக்,,நம்ப தமிழ்நாடு " மது-விளக்கு" மாநிலம்.உண்மையை சொல்லணும்னா சரக்கு கிடைக்கும்,ஆனா ரேட் ஜாஸ்தி.நல்ல விஷயம்.
4. புறா,ரோடு முழுக்க புறா,ஊர் முழுக்க புறா. புறா பிடிக்க இந்த ஊர்ல தடையாம்.அப்புறம்,80 % மக்கள் சைவம்.
5. 24 மணி நேரம் மின்சாரம்.நோ பவர் கட்.
5. Hai nu சொன்ன உடனே ஹாய் சொல்லும் girls. நம்ம ஊர் மாதிரி அப்பன்கிட்ட சொல்லி அவன் அருவாள எடுத்துட்டு வர கதை எல்லாம் இல்ல.
(பி.கு:- நம்ம ஹாய் சொல்ல வேணாம், அவங்களே ஹாய் சொல்லுவாங்க நாம south indianu தெரிஞ்சா)
6. South Indians அப்டின இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நம்ம எல்லாரும் ரொம்ப அறிவாளின்னு நினைக்கறாங்க.
Ex: என் கம்பெனில உயர் அதிகாரிகள்ள நிறைய பேர் சவுத் இந்தியன்ஸ்.
7. பட்டம் விடரதுக்குனே தனியா ஒரு பண்டிகை, அதுக்கு பேரு உத்தராயன். ரொம்ப granda கொண்டாடுவாங்க. CM கூட இந்த விழால கலந்துக்கறார் பாருங்க.

பிடிக்காதது,
1 .பேசுறது ஹிந்தியா இல்ல குஜராத்தியா? கொஞ்சம் சொல்லிட்டு பேசுங்க.
2.பாக்கு போடும் ஆட்கள்.
3. நம்ம south இந்தியன் எல்லாரையும் மதராசி அப்டின்னு சொல்லித்தான் அழைப்பாங்க.
4. ஹிந்தி தெரியாதுன்னு சொன்னா கூட ஹிந்தில தான் பதில் சொல்லுவானுங்க.
5. தமிழ் நாடு அப்டின்னு ஒரு மாநிலம் இருக்கறதே இவங்க பலபேருக்கு தெரியாது.
6. Madras, Bangalore, Hyderabad இந்த மூணுமே மாநிலம்னு நெனச்சிட்டு இருக்காங்க.

சில விளக்கங்கள்.
1.எல்லாரும் சொல்லற மாதிரி ,குஜராத் முன்னேறுதா?,
ஆமாம்,உண்மை தான்.இப்ப கூட vibrant குஜராத் னு ஒரு திட்டம்.$370 பில்லியன் முதலீடு.
http://www.vibrantgujarat.com/

2.அப்போ, ஏழைகளே இல்லையா?காரணம்.
இல்ல இருக்காங்க,ரோட்டு ஓரத்தில்,பிச்சைக்காரங்க - எல்லாரும்.
காரணம்,தெரிஞ்சா சொல்வேன்.

3 .ரோடு வசதி எப்படி?
சூப்பர்,எல்லாம் பெரிய பெரிய ரோடு .எல்லா சிக்னலும் - ரவுண்டானா.

பயணம் தொடரும் !!!!!!!!!!!!!!!!!!!!!