அப்போது நான் அவளுக்கு புதியவன்!
பழகிய கொஞ்ச நாட்களிலேயே
என் வரையரைற்ற காதலுக்கு
காரணம் கேட்டாள்!
அப்போது கவிதையும் தெரியாது எனக்கு !
எனவே, வார்த்தைகளையும் காரணத்தையும்
தேட வேண்டி இருந்தது !
தேடியதும் சொன்னேன்!
"எங்கிருந்தோ வருகிற
ஊர்பேர் தெரியாத காற்று
உன்னிடம் அனுமதி வாங்கிக்கொண்டா
உன்னை வாழ வைக்கிறது ?
"நானும் காற்று தான் என்று !
No comments:
Post a Comment