ஆண்களே காதலை சொல்வதற்கு முன்பு....இந்த பதிவை சற்று படித்து வெகு நிதானமாக யோசித்து காதலை வெளிப்படுத்துங்கள்
அவள் சிரிப்பதற்காக நீ கோமாளியாக வேண்டும்……..
அவள் திட்டுவதற்காக நீ தவறிழைக்க வேண்டும்…….
அவள் ஆறுதல் சொல்லவதற்காக நீ சோகமாக வேண்டும்.........
அவள் சந்தோஷப்படுவதற்காக நீ சிரிக்க வேண்டும்........
அவள் தடவிக்கொடுப்பதற்காக நீ காயங்கள் ஏற்படுத்திக் கொள் வேண்டும்….
அவள் செல்லமாக கோபப்பட நீ அவளை வம்புக்கிளுக்கவேண்டும்.......
அவள் அணைப்பதற்காக நீ நொந்து போக வேண்டும்.......
அவள் தரும் முத்தங்களுக்காவே நீ வெற்றியடைய வேண்டும்......
அவள் சிந்தும் கண்ணீருக்காக நீ தோற்றுப்போக வேண்டும்....
அவள் துடைத்துவிடுவதற்காக நீ மழையில் நனைய வேண்டும்....
அவள் கனவில் வர நீ தூங்க வேண்டும்........
அவள் கொஞ்சுவதற்காக நீ குழந்தையாக வேண்டும்.....
அவள் அன்பு காட்டுவதற்காக நீ நோயாளியாக வேண்டும்.........
அவள் காட்டும் செல்லக்கோபங்களுக்காக நீ தாமதமாய் வரவேண்டும்.......
அவள் பேரை எப்போதும் சொல்ல நீ கிளி வளர்க்க வேண்டும்...........
அவள் சூடிக்கொள்ள நீ ரோஜா செடி வளர்க்க வேண்டும்.........
அவள் செல்ல சிணுங்கல்களுக்காக நீ கிண்டல் செய்வேண்டும் ......
அவள் அகன்ற விழிகளை ரசிக்க நீ அதிர்ச்சியளிக்க வேண்டும்....
அவள் பெருமிதப்பட நீ எப்போதும் உண்மையாய் இருக்க வேண்டும்......
இப்ப சொல்லுங்க காதலில் வசப்பட இந்த மாதிரி டெரரருக்கு எல்லாம் நீங்க ரெடியா மக்களே.
No comments:
Post a Comment